DOWNLOADஏப்ரல் 2, 2026, வியாழக்கிழமை அன்று நடைபெற்ற பொது மாநாட்டின் தலைமைத்துவக் கூட்டத்தில், 91 புதிய பிரதேச எழுபதின்மர்கள் அறிவிக்கப்பட்டு, ஆதரவு வாக்குகளுக்காக முன்மொழியப்பட்டனர். மேலும் 75 பிரதேச எழுபதின்மர்கள் ஆகஸ்ட் 1, 2026 அன்று அல்லது அதற்கு முன்னதாக விடுவிக்கப்படுவார்கள்.
பிரதேச எழுபதின்மர்கள் என்பவர்கள் பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் தலைவர்கள் ஆவர். இவர்கள் "விசேஷ சாட்சிகளாக" இருப்பதற்கும், தங்களுக்கு நியமிக்கப்பட்ட பகுதிகளில் "சபையை கட்டியெழுப்புவதிலும், அதன் அனைத்து விவகாரங்களையும் ஒழுங்குபடுத்துவதிலும்" மற்றும் "சுவிசேஷத்தைப் பிரசங்கித்து நிர்வகிப்பதிலும்" பன்னிரு அப்போஸ்தலர்களின் குழுமத்திற்கு உதவுவதற்காக பிரதான தலைமையால் அழைக்கப்படுகிறார்கள் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 107:25, 34, 38). அவர்கள் பன்னிரு அப்போஸ்தலர்களின் குழுமத்தின் திறவுகோல்கள் மற்றும் வழிநடத்துதலின் கீழ் செயல்படுகிறார்கள்.
பிரதேச எழுபதின்மர்கள் குறிப்பிட்ட புவியியல் பகுதிகளில் பணியாற்றுவதற்காக அழைக்கப்பட்டு நியமிக்கப் படுகிறார்கள், ஆனால் தேவைக்கேற்ப அவர்கள் மற்றப் பகுதிகளிலும் பணியாற்றுவதற்கு நியமிக்கப்படலாம். அவர்கள் முழுநேர சேவைக்காக அழைக்கப்படுவதில்லை மேலும், பொதுவாக ஐந்து ஆண்டுகள் வரை சேவையாற்றுகிறார்கள்.
எழுபதின்மர்கள் அனைவரும் சமமான அதிகாரத்தைக் கொண்டிருந்தாலும், அவர்களில் சிலர் பொது அதிகாரிகளாகவும், மற்றவர்கள் பிரதேச எழுபதின்மர்களாகவும் நியமிக்கப்படுகிறார்கள்.
நான்காவது எழுபதின்மரின் குழுமம்
ஆசியா பிரதேசம்
பீட்டர் புஷி, 46, பாங்காக், தாய்லாந்து; தற்போது பாங்காக் தாய்லாந்து மேற்கு பிணைய ஆலய ஆயத்த ஆசிரியராகப் சேவையாற்றி வருகிறார்; முன்னாள் கிளைத் தலைவர், ஆயர், சேகரத் தலைமை ஆலோசகர், உயர் ஆலோசகர், ஊழியத் தலைமை ஆலோசகர், ஊழியத் தலைவர் மற்றும் பிணைய தலைமை ஆலோசகர்; மனைவி: கமலட்சி; மூன்று குழந்தைகள்.
தின் பக் பான், 41; சமீபத்தில் சேகரத் தலைவராக விடுவிக்கப்பட்டவர்; முன்னாள் கிளைத் தலைமை ஆலோசகர் மற்றும் கிளைத் தலைவர்; மனைவி: நு சுவான் குயீன்; இரண்டு குழந்தைகள்.
ஆகஸ்ட் 1, 2026 அன்று அல்லது அதற்கு முன்னதாக விடுவிக்கப்படவுள்ள பிரதேச எழுபதின்மர்கள்
நான்காவது எழுபதின்மரின் குழுமம்
ஆசியா பிரதேசம்
ராஸ் ஏ. சைல்ஸ்
ஜான் குட்டி